ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் படி 6 பேருக்கும் விடுதலை வழங்கி தீர்ப்பளிக்கப்படுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Supreme Court Released Rajiv Gandhi Killers Nalini

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.