மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று நடந்தது. இந்த போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார்.

பாலமேடு பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த ஐந்து வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளுடன் களமாடியவர். ராஜேந்திரன் – தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு காளைகளை அடக்கி சிறந்த வீரராக திகழ்ந்தவர்.

வீட்டிற்கு செல்லாத பரிசுகள்! மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம் | Jallikattu Youth Aravind Raj Death

 

இந்த நிலையில் வாடிவாசலில் அரவிந்த்ராஜ் காத்திருந்த போது திடீரென திடீரென ஆக்ரோஷத்துடன் வெளிவந்த காளை அவரின் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதையடுத்து படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டிற்கு செல்லாத பரிசுகள்! மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம் | Jallikattu Youth Aravind Raj Death

 

மகனின் இறப்பு குறித்து தாய் தெய்வானை கூறுகையில், இதோ வந்துவிடுகிறேன் அம்மா என கூறி சென்ற எனது மகன் இறந்து போயுள்ளான். திருமண ஏற்பாட்டிற்கு சரி என்று சொன்னவன் சடலமாக ஆகிவிட்டான்…..

கார் வாங்கிவிட்டு தான் வருவேன் என்று கூறி சென்றவன் சடலமாக வந்துவிட்டான்… அவன் வாங்கிய பரிசு பொருட்கள் கூட வீடு செல்லவில்லை… அதற்குள் சடலமாக சென்றுவிட்டானே என்று கண்ணீர் மல்க கதறியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்கு செல்லாத பரிசுகள்! மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம் | Jallikattu Youth Aravind Raj Death

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.