நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாட்டில் உள்ள 3 அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆறு இலங்கையர்கள் நியுஸிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் நியூஸிலாந்திற்கு ஒரு படகு வழியாக தப்பி செல்ல முயன்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் நாட்டில் உள்ள கியூ பிரிவின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி 6 பேரும் தமிழ்நாட்டின் படகு உரிமையாளரிடம் முன்கூட்டியே பணம் செலுத்தி படகு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.