இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சாகடத்த முயன்ற அறுவர் கைது! 

இந்தியா- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 2090 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் தூத்துக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ச்சியாக கும்பல் ஒன்று திட்டமிட்டு தமிழகம், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு கஞ்சாவை விற்பனை செய்துவருகின்றதாக தூத்துக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 4 கோடி ரூபா மதிப்பிலான 2090 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இந்த கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த இருந்ததாகத் தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் 6 பேரை தூத்துக்குடியில் கைது செய்துள்ளதுடன் 2090 கிலோ கஞ்சா, 25 ஆயிரம ரூபா பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகளை மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளமையும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.