கொரோனா வைரஸ் எதிரொலி: 30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் குறைந்த எண்ணெய் விலை காரணமாக 30,000 பேர் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று பிரித்தானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறை எச்சரித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் வழங்கல் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த விலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ப்ரெண்ட் (டீசநவெ) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 120 டொலருக்கு விற்கப்பட்டது. ஆனால் சமீபத்திய வாரங்களில், அது 16 டொலராகக் குறைந்துவிட்டது.

இதனால் விலை மீண்டும் மீட்கப்படுவதற்கான உண்மையான அறிகுறியே இல்லை என கூறப்படுகின்றது.

கொவிட் -19 தொற்றுநோயை விட பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்கும் என்று தொழில் துறை அஞ்சுகிறது. இதன் பொருள் பல தொழிலாளர்கள் தூண்டப்படுவதைக் காட்டிலும் பணிநீக்கம் செய்யப்படுவதேயாகும்.

முன்னறிவிக்கப்பட்ட வேலை இழப்புகள் இத்துறையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியாற்றும் 151,000 பேரில் ஐந்தில் ஒருவரைக் குறிக்கும்.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, வரவிருக்கும் மாதங்களில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.