உத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், காரினுள் இருந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.