இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 9,887 பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,622 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 30ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும் பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வடைகின்றது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைகின்றது.

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் 6ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலைவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,622 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,946 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதில், ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுவரை இல்லாத உச்சமாக நேற்று 1,458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆகவும் மேலும் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து> உயிரிழப்பு எண்ணிக்கை 251 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.