வவுனியாவில் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

வவுனியா நிருபர்

நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (09.07.2020) காலை 5.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காலை 8.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் நடத்துனர் கடந்த 03.07.2020 பருத்தித்துறை பகுதிக்கு இடமாற்றப்பட்டிருந்தார். அவரின் இடமாற்றம் நடத்துனரை பலிவாங்கும் செயற்பாடு என தெரிவித்து இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை 5.30 மணி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக பயணிகள் சிரமத்தினை எதிர்கொண்டிருந்த போதிலும் வெளிமாவட்ட இ.போ.ச பேரூந்துகள் , தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தமையினால் பயணிகளுக்கு பெரிதளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை

அதன் பின்னர் 10 நாட்களுக்குள் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக இ.போ.ச வவுனியா சாலை முகாமையாளர் ஷாகீர் உத்தரவாதம் அளித்தமையினையடுத்து இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்களின் போராட்டம் காலை 8.30மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இ.போ.ச வவுனியா சாலையின் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.