வவுனியாவில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்…

சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07) காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘சமாதானமான தேர்தலை நோக்கி’ என்ற தொனிப்பொருளின் கீழ் கபே அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.மனோராஜ் அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இதன் போது தேர்தல் கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல், தேர்தல் விதிமுறைகள், தேர்தலின் போது சுகாதார நடைமுறைகளைப் பேணல், வன்முறைகளை தவிர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கண்காணிப்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.