தமிழர்கள் எதைக் கேட்டாலும் அது சிங்களவர்களுக்குப் பிரிவினையே! – சித்தார்த்தன் பதிலடி…

“தமிழர் தரப்பு எதைக் கேட்டாலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு அது பிரிவினையே. எனவே, இதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் சரியானதாகவே இருக்கும்.

தமிழர் தரப்பு எதனை வலியுறுத்தினாலும் பிரிவினைவாதத்தைக் கோருகின்றார்கள் என்றே தென்னிலங்கை தலைவர்களும், கடும்போக்குவாத பௌத்த தேரர்களும் பரப்புரை செய்கின்றார்கள். இதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

அரசியல் தீர்வு மட்டுமன்றி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் குறிப்பிட்டுள்ளாளோம்.

நாம் அரசியல் தீர்வையும் அபிவிருத்தித் திட்டங்களையும் ஒரு சமாந்தரக் கோடுகளில் கொண்டு செல்லவுள்ளோம். இதுவே எமது நோக்கமாகவுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.