மீண்டும் கொரோனா எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்று 37 பேருக்கு கொரோனா!!!!!!

இலங்கையில் நேற்று (31) 37 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கட்டாரில் இருந்து 32 பேர், இந்தியாவில் இருந்து 3 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இருவர் என நாடு திரும்பிய 37 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 169 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 2,868 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.