9 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை பிராந்தியத்தில் கண்டுபிடிப்பு…

பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள்  பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது.
அம்பாறை பகுதியில் பெலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்பு பட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும்  மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
 பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில் நிந்தவூர் பகுதியில் உள்ள  9 பேருக்கு பொசிட்டீவ் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என
இன்று (24)     முடிவு  வெளியாகியதாக சுகாதார பிராந்திய முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
 கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.