கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல்.
முல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை நேற்று(02)முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் நீதிமன்ற வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த நபர் மாங்குளம் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்த போது அவரது உடைமையில் 800கிராம் கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகைப் பணமும் காணப்பட்டமையால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை