பாராளுமன்ற சபைக்கு பிரதமர் மஹிந்தவின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் நியமிப்பு
20வது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பாராளுமன்ற சபையின் பிரதமரின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த யோசனைக்கு சபாநாயகர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறும்.
அதற்கமைய பாராளுமன்ற சபை பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளடங்களாக பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியொருவர், சபாநாயகரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியொருவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியொருவரை கொண்டிருக்கும்.
கருத்துக்களேதுமில்லை