கொரோனா -மேலும் 332 பேர் குணமடைவு: 5,581 பேர்; நேற்று 275 பேர் அடையாளம்: 11,335 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 332 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் Brandix ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.நேற்றையதினம் (02) Brandix ஆடைத் தொழிற்சாலை கொத்தணி, பேலியகொடை மீன் சந்தை கொத்தணி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 275 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இன்று (03) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,060 இலிருந்து 11,335 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,249 இலிருந்து 5,581 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 43 பேர், பேலியகொடை/ மீன்பிடி துறைமுக தொடர்பாளர்கள் 232 பேர் (வெளிநாடுகளிலிருந்து வந்த 00 பேர்) ஆகிய 275 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.