தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீடத்தின் பீடா திபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின்
முதலாவது சமூகவியல் பேராசிரியரா க பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 05.09.2019 மு தல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பீடாதிபதி ஒருவர் பே ராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற் தடவையாகும். இலங் கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தின் கலை கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அப்பீடத்தின் பீடா திபதியாக தெரிவு செய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது குறி ப்பிடத்தக்கது.
இலங்கையில் சமூகவியல் பேராசி ரியர்களாக பதவி உயர்வு பெற்றிரு ப்பவர்கள் மிகச்சொற்பமானவர்களே. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ் லிம்கள் சார்பில் சமூகவியல் பே ராசிரியர் விடயத்தில் பாரிய வெ ற்றிடம் நிலவுகின்றது. இவ்வெற் றிடத்தினை நிரப்பும் வகையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியராக இளம் கல்விமானும் சமூகச் செயற்பாட்டா ளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் பதவி உயர்வு பெறுவது பாராட்டத்தக்கது. இப்பதவி உயர் வின் மூலம் தனது பல்கலைக்கழகத் திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றக்கூடிய ஒருவராக பேராசி ரியர் றமீஸ் அபூபக்கர் மிளிர்வா ர் என்பதில் ஐயமில்லை.சாய்ந் தமருதினைப் பிறப்பிடமாகக் கொண் ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாதாரண குடும்பப் பின்னணியினை க் கொண்டவர். இவர் மிஸ்கீன் பா வா அபூபக்கர் மற்றும் உதுமான் கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார். மூன்று சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாகக் கொண்ட பே ராசிரியர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியை சில்மி யத்துல் சிபானாவினை மணமுடித்து ள்ளார். இவர்களுக்கு இரு ஆண் கு ழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக் கது.
இவர் தனது ஆரம்பக் கல்வியினை சா ய்ந்தமருது அல் ஜலால் வித்தியா லயத்திலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை யிலும் கற்றுக்கொண்டார். பல்கலை க்கழக கல்வியினை இலங்கை தென்கி ழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற் றார். இப்பல்கலைக்கழகத்தில் சமூ கவியல் துறையினைக் கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியினைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியினையும் பெற் றுக்கொண்டார்.
2005இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக வி ரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப் பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக் கர், 2006ஆம் ஆண்டு அதே பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறை நிரந் தர விரிவுரையாளராக நியமிக்கப் பட்டார்.பேராசிரியர் றமீஸ் அபூ பக்கர் சமூகவியல் முதுதத்துவமா ணிப் பட்டத்தினை (2010) பேராதனை ப் பல்கலைக்கழகத்திலும் முரண்பா டு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின்படிப்பினை(2010) இங் கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போ ர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற் றுக்கொண்டார். தனது கலாநிதி பட் டப்படிப்பினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக வி ளங்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார் . இக்கற்கையினைத் தொடர்வதற்கான ஆய்வுப் புலமைப்பரிசிலினை பெற் றுக்கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், புகழ்பெற்ற கல்விமா ன் பேராசிரியர் செய்ட் பரீட் அலடாஸின் வழிகாட்டலின் கீழ் தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூகப் பிரச்சினைகள், தொடர்பா டல், இனத்துவம், அரசியல் சமூகவி யல், சிறுபான்மைக் கற்கைகள் மு தலிய ஆய்வுப் பரப்புக்களில் நி புணத்துவம் பெற்றுள்ள இவர், 2011இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரி வுரையாளர் தரம் இரண்டிற்கும், 2017இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றிற்கும் பதவியுயர்த் தப்பட்டார். தென்கிழக்குப் பல் கலைக்கழகத்தில் சமூகவியல் பிரி வினை தனியான ஒரு துறையாக நிறுவு வதில் பெரும் பங்காற்றிய பேராசி ரியர் றமீஸ் அபூபக்கர், 2017ஆம் ஆண்டு அத்துறையின் மு தலாவது தலைவராக நியமிக்கப்பட்டி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் புரி சேவைகள், சர்வதேச தொடர்பு கள், பல்கலைக்கழக ஆசிரியர் விரு த்தி நிலையங்களின் பணிப்பாளரா கவும் இவர் செயற்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி ல் பல்வேறு பதவி நிலைகளை வகித் த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019ஆம் ஆண்டு கலை கலாசார பீடத் தின் பீடாதிபதியாகத் தெரிவு செ ய்யப்பட்டு தற்போது வரை அதன் பீ டாதிபதியாக செயற்பட்டு வருகின் றார்.
பீடாதிபதி என்றவகையில் தனது பீ டத்தின் தரத்தினை மேம்படுத்து வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார். இவரது அயரா த முயற்சியின் பயனாக இலங்கை தெ ன்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஐந்து து றைகளினால் (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மெய்யியல், புவியி யல், தமிழ்) பட்டப்பின்படிப்பு க் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளன. இதன் மூலம் எமது பிரதேசத்தி னை சேர்ந்த மாணவர்கள் முதுதத்து வமாணி மற்றும் கலாநிதிப் பட்டங் களை பூர்த்தி செய்வதற்கான வாய் ப்பு உருவாகியுள்ளமை குறிப்பி டத்தக்கது. பல்வேறு தேசிய மற்று ம் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரை ஆற்றியுள்ள இவர், உலகத் தரம் வாய்ந்த ஆய்வு ச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டு ரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக் காக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தெ ன்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌ ரவப் பட்டத்தினை பல முறை பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், ஆசிய மன்றம் உள்ளிட்ட பல சர்வதே ச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிரு ந்து ஆய்வு நிதிகளை வெற்றி கொண் டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவர் 2019இல் கெய்சிட் என அழை க்கப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாஷனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தினைப் (பெலோசி ப்) பெற்றுள்ளார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவனா கவும் சமூகத்தில் ஒரு இளம் ஆய் வாளராகவும் இப்பிராந்தியத்தின் சிறந்த கல்விமானாகவும் இந்நாட் டின் சிறந்த குடிமகனாகவும் செ யற்படும் பீடாதிபதி கலாநிதி றமீ ஸ் அபூபக்கர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது சமூ கத்திற்கு பெருமை சேரக்கின்றது.
(பாறுக் ஷிஹான்)
கருத்துக்களேதுமில்லை