தொற்றுக்குள்ளான மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான க.பொ.த. உயர்தர மாணவிஇ பரீட்சை எழுத இன்று (3) விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி வரும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மாணவியொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, ஒக்டோபர் 29ஆம் திகதி கண்டறியப்பட்டது.
ஓட்டமாவடியில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை எழுதி வந்த நிலையிலே, அம்மாணவிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பரீட்சையை, மாணவி சிகிச்சை பெற்று வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்து எழுத பரீட்சை திணைக்களத்தால் விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி, மாணவியுடன் முன்னதாக பரீட்சை எழுதிய ஏனைய மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.