காத்தான்குடியில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்…
(எம்.எஸ்.எம். நூர்தீன்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று (03) ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொழும்புக்கு வேலை நிமிர்த்தமாக சென்று வந்து இருந்தவர். இவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை