முல்லைத்தீவு-மாங்குளம் மல்லாவி வீதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் நகரிற்கு அண்மையாக யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(03) இரவு 10.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இத் துன்பியல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:
மல்லாவியில் தொழில் நிமித்தமாக தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு மல்லாவி – மாங்குளம் வீதி ஊடாக கொடிகாமத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் மாங்குளம் நகரிற்கு அண்மையாக உள்ள முனியப்பர் கோவிலுக்கு அருகே பயணிக்கும் போது வீதியைக் கடந்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் சடலத்தை பொதுமக்களின் உதவியுடன் மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இத் துன்பியல் சம்பவத்தில் கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த ஆணந்தராஜா – விஜயானந்தன்(வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.