நற்பட்டிமுனை ஸ்ரீ கணேச பெருமாள் ஆலயத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி விசேட வழிபாடுகள்…

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றுவருகின்றது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்   நற்பட்டிமுனை ஸ்ரீ கணேச பெருமாள் ஆலயத்தில் விசேஷட ஹோமம், விசேட வழிபாடுகள்  சுகாதார வழிமுறைகளை பேணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை 8.30 மணியளவில் ஆலயத்தின் தலைவர் அரசரெட்ணம் தலைமையில் இன் நிகழ்வானது இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அம்பாறைமாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் அடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்
ஆலய பிரதம குரு வித்யாசாகன் ஈசான சிவாச்சாரியார்,தேச கீர்த்தி சிவஸ்ரீ கணேச திவிசாந்த குருக்கள் தலைமையில் யாக கிரிகைகள் யாவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.