கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியிலும் விசேட வழிபாடுகள்…

கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியிலும் விசேட வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் புனித திரேசாள் தேவாலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றது. இதன்போது நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றது.

இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் யாக பூஜைஒன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் குறித்த யாக பூசை இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றது. சம நேரத்தில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள தும்மினி விகாரையிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது நாட்டை தொற்றிலிருந்து விடுவிப்பதற்காக பிரித் ஓதலும் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.