மஞ்சளுடன் சிக்கிய இந்திய மீனவர்கள் 4 பேரும் கொரோனா அச்சத்தால் திருப்பி அனுப்பிவைப்பு…

இந்தியாவில் இருந்து டோலர் படகில் 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சளைக் கொண்டு வந்து இறக்கிய டோலர் படகும் அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து டோலர் படகில் மன்னார் அரிப்பு பகுதியில் கற்பிட்டி மீனவர்களின் படகு மூலம் மஞ்சள் இறக்கும் வேளை  கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது டோலரில் இருந்த 4 இந்திய மீனவர்களும் இலங்கையைச் சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இருந்தபோதும் டோலரில் இருந்த மஞ்சள் முழுமையாக இறக்கப்பட்டு இலங்கையைச் சேர்ந்த இருவர் மட்டும் கைதுசெய்யப்பட்டபோதும் கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்கள் நால்வரும் டோலருடன் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டது. இதேநேரம் இவர்களின் தகவலின் அடிப்படையில் கற்பிட்டிப் பகுதில் 2 ஆயிரத்து 600 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் மொத்தம் 5 ஆயிரத்து 400 கிலோ மஞ்சள் பைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கையை சேர்ந்த இருவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படு்த்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.