510 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்றும் 510 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கிப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 5 ஆயிரத்து 609 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.