தமிழகத்தை அச்சுறுத்தும் “நிவர்” இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் இன்று அறிவித்துள்ளது..

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துளளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.