விசேட அதிரடிப்படையினரால் வவுனியா – கிடாச்சூரியில் மரக்கடத்தல் முறியடிப்பு !

வவுனியா – கிடாச்சூரி பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

வேலங்குளம் செங்கல்படையில் இருந்து கல்மடு ஊடாக நெளுக்குளம் பகுதிக்கு முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக புளியங்குளம் விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினரும்  பொலிசாரும் இனணந்து சென்ற போது கிடாச்சூரு பகுதியில் மரக்கடத்தல் வாகனத்தை வழிமறித்து கடத்தலை முறியடித்துள்ளனர்.
இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹப் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஒடியுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை  ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.