குடும்ப தகவல்களை கணணிமையப்படுத்தல் தொடர்பில் விழிப்புணர்வு
குடும்ப விபரங்களை கணினி மயமாக்கும் நோக்கில் தரவுகளை சேகரிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , பட்டதாரி பயிலுனர்கள் அனைவருக்குமான தெளிவூட்டல் பயிற்சி பட்டறை தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் (23) நடைபெற்றது.
குறிப்பிடப்பட்ட வினாக் கொத்துக்களை எவ்வாறு நிரப்புதல் உள்ளிட்ட விடயங்களை சேகரிக்கும் முறைகள் தொடர்பிலும் விழிப்பூட்டப்பட்டது.
இதில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர் ஜே.நிஹாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்கள்.
கருத்துக்களேதுமில்லை