கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

கொரோனா தொற்று அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், இந்த வியடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி, பொலன்னறுவை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவது குறித்து அவதானம் செலுத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், இது தொடர்பில் உடன் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மேலும் பல கொரோனா கொத்தணிகள் உருவாகக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.