வவுனியா பூவரசங்குளம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்து கைக்குண்டுகளை பூவரசங்குளம் காவல்துறையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று (17) மாலை வவுனியா பூவரசங்குளம் செங்கல்படை பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட போது குறித்த காணியில் முட்டி ஒன்றினுள் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்துள்ளார்.

பின்னர் குறித்த விடயம் பூவரசங்குளம் காவல்துறையினருக்கு தெரியபடுத்தபட்டபின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முட்டி ஒன்றிற்குள் இருந்து 30 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.