மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் ;மூவர் கைது!

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான போத்தல்களை பதுக்கி வைத்திருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை விசேட பொலிஸ் பிரிவினரின் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர் .

குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், மாமாங்கம், கூழாவடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, 180 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 307 சாராய போத்தல்களும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவுள்ள 8 சாராய போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்த நபர் தொடர்பாக மட்டக்களப்பு விசேட குற்றப் பிரிவு உயரதிகாரி தலைமையில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.