இந்திய நகரங்களில் பாடவுள்ள இலங்கைப் பாடகி யொஹானி…

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் மூலம், உலகப் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளார். செப்டெம்பர் 30, ஒக்டோபர் 3 ஆம் திகதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

புதுடெல்லிக்கு அருகிலுள்ள, ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதியும் தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கில் ஒக்டோபர் 3 ஆம் திகதியும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் யொஹானி பங்குபற்றவுள்ள இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ (சுப்பர்மூன் #நவ்ட்ரெண்டிங்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் யொஹானியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இது குறித்து யொஹானி தெரிவிக்கையில், ‘இந்தியாவில் பாட வேண்டும் என நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.