வைகோ கோரிக்கை ஏற்பு…

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனைக் குழு கூட்டம் (ஊடிளேரடவயவiஎந ஊடிஅஅவைவநந ஆநநவiபே) நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இன்று (08.12.2021) காலை 9 மணிக்கு, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பங்கேற்றார்.

அமைச்சர், அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியில் பேசினர்.

அப்போது வைகோ குறுக்கிட்டு, “இங்கே எல்லோரும் இந்தியில் பேசுகின்றார்கள; நான் எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

“மூத்த உறுப்பினர் ஆகிய தாங்கள் இன்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமாக வரவேண்டிய மொழிபெயர்ப்பாளர் இன்று வரவில்லை.

எனவே, உங்கள் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என சொன்னார்.

அதன் பிறகு பேசிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், வைகோ அவர்களை வரவேற்றுப் பேசினர்.

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில், மொழிபெயர்ப்பாளர் ஒருவர், மொழி பெயர்த்துச் சொல்வது வழக்கம்.

உறுப்பினர்கள் காதுகளில் ஒலிபெருக்கி அணிந்துகொண்டு அதன் வழியாக மொழிபெயர்ப்பைக் கேட்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.