வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

வட மாகாணத்தில்  அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்,  “காரணம் ...

மேலும்..

கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி தமிழரைக் கொச்சைப்படுத்துகிறார் விக்கி ஆயுதப் போராளிகள் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை என்கின்றார் கணேஷ் வேலாயுதம்

"போராளிகள் குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அருகதை இல்லை. 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்தான். ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் பெற்றுக்கொடுத்த மாகாண சபைக் கதிரையை 5 வருடங்களாகப் பிடித்துக் ...

மேலும்..

உள்ளக சுயநிர்ணய உருத்து தமிழ் மக்களுக்கு உள்ளது! மறுத்தால் விளைவு பாரதூரமாகலாம் கோட்டாவை எச்சரித்தார் சம்பந்தன்

இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் குடியியல் உரிமைகளின் அடிப்படையிலும், பொருளாதார சமூக கலாசார உரிமைகளின் அடிப்படையிலும் ஒரு மக்கள் குழாமிற்கு உள்ளக சுயநிர்ணய உரித்து உள்ளது.  அது மறுக்கப்படுகின்றபோது விளைவுகள் பாரதூரமாக அமையும். - இவ்வாறு கோட்டா ...

மேலும்..

வேலைவாய்ப்புக்களை இலகுபடுத்த வேண்டும் – மஹிந்த

வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் புதிய அபிவிருத்தி செயல்முறையுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியும்  நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து செயற்படும் புது யுகமொன்று தோற்றம் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அந்த புது யுகத்தை உருவாக்குவதற்கு மொட்டு ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, அறிவியல், வர்த்தகம், முகாமைத்துவம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கல்வி ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

மேலும்..

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களில் நேற்றைய தினம் ...

மேலும்..

8 மாதங்களாக எதனையும் சாதிக்காத அரசாங்கம் 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது?- ரணில்

8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் ...

மேலும்..

ரூபெல்லா நோயைக் கட்டுப்படுத்திய முதல் 2 நாடுகளில் இலங்கை!

உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. மூன்று வருடங்களினுள் ரூபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனங்காணப்படாவிட்டால் குறித்த நாடு ...

மேலும்..

இரத்தினபுரி தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு

இரத்தினபுரி – பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த இரண்டு சடலங்களும் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் இருவரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்களில் ஒரு சடலத்தின் ...

மேலும்..

கிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் 70 வீதமானோர் இளவயதுடையவர்கள் என கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், ...

மேலும்..

இலங்கையில் சிக்கியிருந்த 153 பேர் இந்தியாவுக்குப் பயணம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 153 பேர் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து ...

மேலும்..

நாவிதன்வெளியில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில்  மூன்றாம் கட்டமாக சவளக்கடை கிராம சேவகர் பிரிவில் உள்ள வி.ஜெயந்தி ...

மேலும்..