நிபந்தனைகளுக்கு உட்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் -ஐக்கிய மக்கள் சக்தி
நிபந்தனைகளுக்கு உட்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் -ஐக்கிய மக்கள் சக்தி
நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கத்தில் பங்குகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி இணங்கினால், அரசாங்கத்தில் பங்குகொள்ள நாங்கள் தயார் என்ற தீர்மானத்தை செயற்குழு உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
“எரிவாயு, எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய அத்தியாவசியப் பொருட்களுக்கு உதவுமாறு நட்பு நாடுகளுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இலஞ்சம் மற்றும் ஊழலை குறைக்கவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் சட்டத்தை கொண்டு வருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் தீர்மானங்களை மீறி அமைச்சுப் பதவிகளை வகித்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை