கொரோனா-மேலும் 530 பேர் குணமடைவு !

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 530 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 6 ஆயிரத்து 88 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 625 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 240 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.