ஹரினையும் மனுஷவையும் கட்சியில் இருந்து வெளியேற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகிறது!
ஹரினையும் மனுஷவையும் கட்சியில் இருந்து வெளியேற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகிறது!
அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருவரும் கட்சியின் கூட்டு தீர்மானத்தை மீறி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அதிகாரம் வழங்குவதற்காக வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களான ஹரின் மற்றும் நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி உயர்பீடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நிர்வகிப்பதற்கான பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குவதற்கு அவர்கள் விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை