கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன?

பெண்கள் தங்கள் கர்ப்பக் காலத்தில் நோய்கள் தாக்கிட வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் தாக்குகிறது என்கிறார்கள். காரணம் கர்ப்பிணி பெண் தன்னோடு தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து ஊட்டச்சத்தை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஆரோக்கியமான கர்ப்பிணி பெண்களே சோர்வடையும் நிலையில் ஏற்கனவே சத்து குறைபாடு கொண்டிருக்கும் பெண் மேலும் பலவீனமாவதோடு உடலில் எளிதாக தொற்றுகளையும் பெற்று விடுகிறார். இது பொதுவானது தான் என்றாலும் கடந்த சில மாதங்களாக உலக அளவில் வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று உலக அளவில் இருக்கும் கர்ப்பிணி பெண்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் யாரும் கண்டறியப்படவில்லை என்றாலும் கூட, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே.இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாட்டில் இந்த தொற்று பரவ வாய்ப்பு குறைவு என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனாலும் இதை அலட்சியமாக கருத முடியாது என்பதும் உண்மையே. நம் அன்றாட பழக்கவழக்கங்கள் உணவு முறை மூலமாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மட்டுமல்லாமல் பிற வைரஸ் தொற்றிலிருந்து எப்படி காத்துக் கொள்ளலாம்

​கர்ப்பக்காலம்

samayam tamil

பெண் கர்ப்பகாலத்தில் உடலளவிலும் மனதளவிலும் மாற்றங்களை சந்திக்கிறார்கள். இதற்கு காரணம் ஹார்மோன் மாற்றங்கள் தான். இதனால் உடலில் அவ்வபோது சோர்வு எட்டிபார்ப்பதும் கூட உண்டு.. வயிற்றில் குழந்தை வளர வளர குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து தாயிடமிருந்துதான் கிடைக்கிறது. அதனால் தான் பேறு காலம் முழுவதும் பெண் சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்றும் சத்துகுறையாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

கர்ப்பக்காலத்தை மூன்று காலமாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும் மூன்று மாதங் களை கொண்டிருக்கும். இந்த மாதங்களில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளையும் குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சிக்கேற்ப அதிகப்படியாக சேரவேண்டிய சத்துக ளையும் திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இதை உங்கள் மருத்துவரே உங்களுக்கு வழங்குவார்.

​நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் சத்து குறைபாடு என்று சொன்னால் இரும்புச்சத்து குறை பாடு, கால்சியம் சத்து குறைபாடு, ஃபோலிக் அமில குறைபாடு, புரதச்சத்து குறைபாடு இந்த நான்கை முக்கியமாக சொல்லலாம். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உடல் ஆரோக்கியம் குறைய தொடங்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடம் பொதுவாகவே வைரஸ் உற்சாகமாக பரவும் என்றே சொல்லலாம்.குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமாக உறுதி செய்ய உடல் உறுப்புகள் அதிகப்படியாக வேலை செய்கின்றது இதனால் இரும்புச்சத்து அதிக அளவு தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறையும் போது இரத்த சோகை மட்டும் அல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் குறைந்துவிடும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறையும் போது கர்ப்பிணிகள் நோய்தொற்றுக்கு உள்ளாவது அதிகரித்துவருகிறது. இதனால் அவர்களை தாண்டி வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் கூட பாதிப்பு நேரிடுகிறது.

 

இந்த சூழலில் உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களை எளிதில் தாக்குவதாகவும் அதிலிந்து தற்காத்துகொள்ள பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துவருகிறார்கள். இந்த தொற்று எளிதில் பரவுவதில் குழந்தைகள், முதியவர்கள் அடுத்து கர்ப்பிணிகள் தான் அதிகம். கொரோனா பாதிப்பால் அச்சத்தில் இருக்கும் கர்ப்பிணிகள் இதிலிருந்து தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

வெந்நீர்

samayam tamil

கர்ப்பிணிகள் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது எடுத்துகொள்ள வேண்டும். கோடைக் காலம் என்பதால் எல்லோரும் குளிர்ந்த நீரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருக்கும் நீரை குடிக் கவே விரும்புவார்கள். ஆனால் குளிர்ந்த நீர் தொற்றுக்கு எளிதில் வழி வகுக்கும். மிதமான வெந்நீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். அதிகப்படியாக நீர் குடிப்பது உடலில் நீர் வறட்சியை உண்டாக்காமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உணவின் போது மட்டுமல்லாமல் எப்போதும் வெந்நீர் பழகுவது நல்லது.

​பழைய உணவு வேண்டாம்

samayam tamil

சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்று கவனம் செலுத்தும் பெண்கள் சமைத்த புதிய உணவை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். காலையில் சமைத்ததை ஃப்ரிட்ஜ் ஜில் வைத்து மாலையில் எடுத்து கொள்வது, இரவு நேரத்தில் எடுத்துகொள்வது கண்டிப் பாக தவிர்க்க வேண்டும். முன் தினம் வைத்த குழம்பை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த உணவுகள் தான் என்றில்லை. வெளியில் வைத்திருந்தாலும் சமைத்து 6 மணி நேரம் ஆன உணவுகளை தவிர்க்க வேண்டும். எப்போதும் உணவையும் மிதமான சூட்டில் எடுத்துகொள்ளுங்கள்.

​நீர்ச்சத்து மிக்க காய்கறி, கீரைகள்

samayam tamil

காய்கறிகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை எடுத்து கொள்ளலாம். சுரைக்காய், புடலங்காய், கோஸ், நூக்கல், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற காய்கறிகள் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தருபவை.

 

கீரைகளையும் தினம் ஒன்றாக வகைப்படுத்தி எடுத்துகொள்ளலாம். குறிப்பாக முருங் கைக்கீரை அதிகளவு இரும்புச்சத்தை அளிப்பவை என்பதால் இயற்கையாகவே உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். கரிசலாங்கன்னி கீரையை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொடுக்கும் ர்ன்பதால் கீரைகளில் இதை தவிர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.

​பழங்கள்

samayam tamil

தினம் ஒரு பழங்கள் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக வைட்டமின் சி அதிகமிருக்கும் பழங் களை எடுத்துகொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கிரகிக்க வைட்ட மின் சி சத்து தேவைப்படுகிறது. அதனால் ஆரஞ்சு சாத்துக்குடி எலுமிச்சை, நெல் லிக்காய் பழங்களை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.

கோடைகாலம் என்பதால் நெல்லி, எலுமிச்சை கலந்து பழச்சாறுகள் அடிக்கடி குடிக்க லாம். இவை தவிர தினமும் ஒரு தம்ளராவது பழச்சாறுகள் எடுத்துகொள்ள வேண்டும். இவை தவிர மாதுளம்பழம், ஆப்பிள், உலர் பழங்களையும் தினமும் எடுத்துகொள்ளலாம்.

​ஆவியில் வேக வைத்த உணவும் அசைவமும்

samayam tamil

உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் உணவு வகைகள் என்றால் ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துகொள்ளலாம். தினமும் இட்லி, இடியாப்பம் போன்ற உணவை எடுத்துகொள்வது நல்லது. இவை சோர்வையும் நீக்கும். தானியங்களில் இட்லி தயாரிப்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

கோடைகாலம் என்பதால் அசைவ உணவுகளை அடிக்கடி எடுத்துகொள்வதை தவிர்ப்பது நல்லது. எப்போதாவது நன்றாக வேகவைத்த இறைச்சியை எடுத்துகொள்வது நல்லது. சமைக்கும் போது மஞ்சள் தூள், மிளகு அதிகம் சேர்ப்பதும் நல்லது.

​ஹீமோகுளோபின் அதிகரிக்கும் உணவு

samayam tamil

உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிக ரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் தினமும் மூன்று வேளையும் உணவுக்கு பிறகு ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிட வேண்டும். இவை ஹீமோகுளோபின் அளவை மாதத்தில் 0. 5 மில்லிகிராம் வரை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவு கணிசமாக உயர்ந்தாலே கர்ப்பிணிகளை எந்த தொற்றும் எளிதில் நெருங்காது.

பிராணயாமம்

samayam tamil

கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யலாம் என்றால் எல்லோருடைய சாய்ஸும் நடைப யிற்சி தான். ஆனால் கர்ப்பிணிகள் தினமும் காலையில் ஒரு பத்து நிமிடங்களாவது ஒதுக்கி பிராணயாமம் (பிராணயாமம் செய்வதற்கு தனி பயிற்சி தேவையில்லை. முறை யாக யோக கலை நிபுணர்களிடம் கற்றுகொள்ள ஒருநாள் போதுமானது) செய்வதன் மூலம் நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் நிறைவாக கிடைக்கும்.

 

இதனால் சளி, இருமல் தொற்றுகள் நெருங்காது. கர்ப்பாகால சோர்வு இல்லாமல் எப்போதும் உற் சாகமாக இருக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

samayam tamil

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்,(குறிப்பாக அஜினோமோட்டோ சேர்த்த உணவுகளை தவிர்ப் பது தான் சிறந்தது.) ஜங்க் ஃபுட் உணவுகள், வெளி இடங்களில் உண்ணுதல் நிச்சயம் தவிர்க்க வேண்டும். வாய்க்கு நன்றாக இருக்கிறதே என்று செயற்கை முறையில் சுவையூட்டப்படும் குளிர் பானங்கள், அதிக இனிப்புகள் இந்த காலத்தில் பொதுவாக தவிர்க்க வேண்டியவை

குறிப்பு

samayam tamil

அதிக நடமாட்டம் இருக்கும் இடங்களில் தேவையற்று வெளியே போக வேண்டாம். முறை யான மருத்துவ பரிசோதனைகளை அவ்வபோது மேற்கொள்ளுங்கள். உடலில் சிறு அறி குறிகள் உபாதைகள் உண்டானாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். சமைக்கும் போது காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் சுத்தமான நீரில் கழுவி பயன் படுத்துங்கள். அருகில் இருப்பவர்கள் ஏதேனும் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களிடமிருந்து சற்று தள்ளி இருங்கள்.

மேற்கண்ட குறிப்புகள் எல்லாமே மிக மிக எளிதானவையே. சரியாக கடைபிடித்தால் பேறுகாலம் முழுவதும் உற்சாகமாக வளைய வரலாம். உடலில் சோர்வை விரட்டும் இந்த பழக்கவழக்கங்களும், உணவு முறைகளும் சரியாக கடைபிடிக்கப்படும் போது நிச்சயம் கொரோனா தொற்றும் உங்களை நெருங்காமல் இருக்கும். நிச்சயம் உங்களை தற்காத்துகொள்ளவும் உதவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.