உடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த செயல்கள் ஆண்களுக்கு வெறுப்பை மட்டும்தான் ஏற்படுத்துமாம்…!

ஆண், பெண் கலவியைப் பொறுத்தவரை இருவருமே ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். இருவரில் ஒருவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கலவி என்பது வலியும், வேதனையும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும். கலவியில் வலி என்பது உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் ஏற்படும்.

 

பொதுவாக ஆண்கள்தான் படுக்கையறையில் தவறுகள் செய்வார்கள் என்று கூறுவார்கள், ஆனால் உண்மை அதுவல்ல பெண்களும் படுக்கையறையில் பெண்களும் சில தவறுகளை செய்கிறார்கள். இது ஆண்களை வெகுவாக பாதிக்கும் மேலும் இது அவர்களுக்கு கலவியில் இருக்கும் விருப்பத்தையும் குறைக்கும். இந்த பதிவில் பெண்கள் படுக்கையறையில் செய்யும் எந்தெந்த விஷயங்கள் ஆண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பார்க்கலாம்.

 

அழுவது

முதல் முறை உறவு கொள்ளும்போது பெண்கள் அழுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அதற்கு பிறகும் உறவின் போது அழுவது முறையல்ல. உறவின் போது அழுவது ஆண்களுக்கு பிடிக்காத விஷயங்களில் முதலாவதாக இருக்கிறது. ஆண்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் உறவின் போது தனது துணை அழுவது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும், தாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக அச்சப்படுவதாகவும் கூறினர். அதற்குப்பின் அவர்களுடன் உறவுகொள்ளும் விருப்பம் தங்கள் குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

 

குழந்தைகளைப் பற்றி பேசுவது

உடலுறவின் போது ” நாம் இத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் “, ” குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் ” போன்றவற்றை பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை. சொல்லப்போனால் பெரும்பாலான பெண்களே இதனை விரும்புவதில்லை. இது இருவரின் அப்போதைய மனநிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

சலிப்பான செயல்பாடு

கலவியின் போது பெண்கள் சலிப்பாக நடந்து கொள்வது ஆண்களை அதிக எரிச்சலடையச் செய்யும். பெண்கள் சலிப்பாக உணருவதை ஆண்களால் உணர முடியும். பல ஆண்கள் உடலுறவின் போது பெண்கள் உற்சாகம் இல்லாமல் இருப்பது தங்களை வெறுப்படைய வைப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில பொசிஷன்களின் போது பெண்கள் உற்சாகமில்லாமல் இருப்பது ஆண்களின் விரக்தியை மேலும் அதிகரிக்கும்.

 

புரியாத மொழியில் பேசுவது

கலவியின் போது உரையாடல் நல்லதுதான், ஆனால் அது எந்த மொழியில் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவேளை பெண்கள் ஆண்களுக்கு முழுமையாக தெரியாத அல்லது புரியாத மொழியில் பேசுவது ஆண்களுக்கு பிடிக்காத செயல்களில் ஒன்றாகும்.

 

தூக்கம்

இது கலவியின் தருணத்தை மொத்தமாக சிதைத்துவிடும். நீங்கள் தூக்கத்தில் இருப்பதைக் காண்பிப்பது, நீங்கள் கவனம் செலுத்தாத மற்றும் ஆர்வமற்றவர் என்பதைக் காட்டுகிறது. இவை இரண்டும் தருணத்தை அழிக்கக்கூடும். கலவியின் போது தங்கள் துணை ஆர்வமில்லாமல் தூங்குவது ஆண்களுக்கு மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தும்.

 

அதிகம் பேசுவது

உடலுறவின் போது வெளிப்படையாக பேசுவது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கலவியின் போது பெண்கள் சீரற்ற உரையாடலைத் தொடங்குவது அந்த தருணத்தை கண்டிப்பாக சிதைக்கும். பெண்கள் தங்களின் உரையாடலை கலவிக்குப் பிறகு வைத்துக்கொள்வது நல்லது.

 

மிகவும் அமைதியாக இருப்பது

உடலுறவின் போது மிகவும் அமைதியாக இருப்பது ஏனென்றால் இது நம்பமுடியாத அளவிற்கு பாதுகாப்பற்றது. கலவியின் போது பெண்கள் அமைதியாக இருப்பது ஆண்களுக்கு தங்களின் செயல்பாடு மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். உண்மையில் சொல்லப்போனால் ஆண்கள் கலவியின் போது தங்களின் செயல்களுக்கு பாராட்டை எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காத போது அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும்.

 

போலியான உச்சக்கட்டம்

பெண்கள் உச்சக்கட்டம் அடைந்தது போல போலியாக நடிப்பதன் மூலம் அவர்கள் ஆண்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, மாறாக ஆண்களுக்கு சங்கடத்தைத்தான் ஏற்படுத்துகிறார்கள். பெண்கள் போலியான உச்சகட்டத்தை அடைவதை ஆண்கள் உணருவது அதற்கு பிறகான அவர்களின் உறவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.