வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு…

வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வானது 21/07/2020 செவ்வாய்க்கிழமை இன்றையதினம் மிகவும் சிறப்பாக முறையில் இடம்பெற்றது.
வசந்த மண்டப முருகப் பெருமானுக்கு அலங்கார பூசைநிகழ்வுகள் இடம்பெற்று ஆலய உள்வீதி வலம்வந்து கொடிக்கம்ப பூசையிணைத்தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டிஎம்.சுதுநிலமே திஸாநாயக்க தலைமையிலும் கொடியேற்ற கிரியைகள் யாவும் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்களினால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக் காலங்களில் வழமைதோறும் காலை,மதியம் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு இவ் வருடம் கதிர்காம பாத யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படாமையினால் இவ் வருடம் பூசை நிகழ்வுகளுடன் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர் ஆண்டுதோறும் அன்னதானத்தினை வழங்குகின்ற காரைதீவு அடியார்கள் தங்களது பூசை நிகழ்வுகளை மேற்கொண்டனர் இதன்போது கலந்துகொண்ட அடியார்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றி அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.