ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு…

பாறுக் ஷிஹான்

கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சாம்பல்திடல்  பகுதியில்  கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில் ஆயுதங்கள் இருப்பதாக    புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய திங்கட்கிழமை(19)  மாலை அவ்விடத்தை  முற்றுகை இட்டனர்.

இதன் போது   குறித்த கிணற்றில் இருந்து குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  ரி-81 ரக துப்பாக்கி  மற்றும் ரவைக்கூட்டுடன் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன்  அக்கரைப்பற்று  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.