கோமரங்கடவல காட்டுப்பகுதியில் வேட்டையாடச் சென்ற 8 பேர் கைது!

திருகோணமலை-கோமரங்கடவல காட்டுப்பகுதியில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற எட்டு சந்தேக நபர்களை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 34, 38, 40 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (31) இடம்பெற்றுள்ளது.
புல்மோட்டை பகுதியிலிருந்து  மயிலவெவ காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக குழு ஒன்று செல்வதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து  பொலிசார் சோதனையில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் எட்டு பேருடன் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியையும்  மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களையும் இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.