149பேர் இன்று நாடு திரும்பினர்

வௌிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று (01) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 49 பேர், கட்டாரில் இருந்து 95 பேர் மற்றும் ஜேர்மனியில் இருந்து 5 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி சிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.