உடல்களைத் தகனம் செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு!
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களைத் தகனம் செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரித்தி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை