தனது முதலாவது சர்வதேச போட்டியில் முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார் யாழ் வியாஸ்காந்த்!..
எல்.பி.எல் போட்டிகளில் ஜெப்னா ஸ்ராலியன்ஸ் அணியின் யாழ்பாணத்தைச் சேர்ந்த வீரர் வியாஸ்காந் தனக்கு கிடைத்த சந்தர்பத்தை சரிவரப் பயன்படுத்தி தனது திறைமையை நிருபித்துள்ளார்.
ஜெப்னா ஸ்ராலியன்ஸ் அணிக்கும் கொழும்பு கிங்ஸ் அணிக்குமிடையிலான இன்று(04/12/2020) இடம்பெற்ற
போட்டியில் முதன் முதலில் களமிறங்கிய வியாஸ்காந்த் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களைக் கொடுத்து 01 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
தனது முதலாவது விக்கெட்டாக கொழும்பு கிங்ஸ்
அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை கைப்பற்றினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் வியாஸ்காந்தின்
19 ஆவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/EwB_FfgLIrM
கருத்துக்களேதுமில்லை