தவறான கருத்துக்களை சமூகத்தில் முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம்-மஹிந்தானந்த அளுத்கமகே

தவறான கருத்துக்களை சமூகத்தில் முன்னெடுத்து நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (20)பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணியும் எதிர்கட்சி அரசியல் யாப்பிற்குட்பட்ட பாராளுமன்றத்தில் இருப்பது கவலைக்குரிய நிலையாகும் என்றும் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் மோசடிகாரர்கள் என்று கூறிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி குரல் கொடுத்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.

கொவிட் நிவாரணங்களை வழங்குவதற்காக 60ற்கும் அதிகமான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.