உரப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி கொக்குத்தொடுவாயில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உரப்பிரச்சினைக்குத் தீர்வுகோரி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் “உரமின்றி உழவு இல்லை, அரசே விவசாயத் துறையைக் காப்பாற்று, விவசாயம் எமது உயிர்மூச்சு, உரத்தினைத் தடைசெய்து எமது உழைப்பினை அழிக்காதே உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன், விவசாயிகள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை