மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நாற்பது ஏக்கர் கொண்ட காணியை, நேற்று முன்தினம் ...

மேலும்..

திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும்

திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என ...

மேலும்..

இலங்கை மீனவர்கள் இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் காப்பாற்றப்பட்டனர்!

இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். படகு விபத்துக்கு ...

மேலும்..

உண்மையான சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி கோட்டாவை சுற்றியுள்ளனர் – அமைச்சர் பிரசன்ன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சுற்றியுள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கணேமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருப்பவர்கள் கொள்கை அடிப்படையிலான அரசியல் ...

மேலும்..

போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன்

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது   என முன்னாள் கிழக்கு  மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன்  தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்  மத்திய முகாம் பிரதேசத்தில் மாலை இடம்பெற்ற கூட்டத்தில் ...

மேலும்..

ஐ.தே.க. மீண்டும் ஒரு வலுவான கட்சியாக உருவெடுக்கும் – நவீன்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒரு வலுவான கட்சியாக உருவெடுக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலப்பன பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குறைபாடுகள் இருந்தாலும் யானையின் சின்னத்தை அழிக்க யாரும் அனுமதிக்க ...

மேலும்..

அரிசி ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவர் காயம்

ஏறாவூர் பகுதியிலிருந்து  பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி   ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் ...

மேலும்..

யாழ்.மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று(திங்கட்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ...

மேலும்..

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,917 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே தற்போதுமட்டும் 148 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதிலும் ...

மேலும்..

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இம்மாத நடுப்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு- கிழக்கில் போட்டியிடும் பிரதான மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் பணிகள், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு – கஃபே அமைப்பு நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு அவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் இன்று (திங்கட்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது ...

மேலும்..

குருமன்காட்டில் இராணுவச் சோதனை சாவடி: அசௌகரியத்தில் மக்கள்

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று (திங்கட்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் அதிகளவு நடமாடும் குருமன்காடு பகுதியிலேயே இந்த இராணுவச் சோதனை சாவடி ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த முக்கிய தகவல் வெளியானது!

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் தீர்மானிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக குறித்த தீர்மானத்தினை மேற்கொள்ளுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் ...

மேலும்..

சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம் – ரிஷாட்

முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும் குடியேற்ற முடிந்ததென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி ...

மேலும்..