தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகல பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் கொரோனா ...

மேலும்..

தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் ...

மேலும்..

பொதுத் தேர்தல்: சுகாதார வழிகாட்டுதல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது – சுகாதார அமைச்சர்

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளமை ...

மேலும்..

யாழ். பாசையூர் கடலில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (புதன்கிழமை) பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து ...

மேலும்..

அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் – மைத்திரி

சர்வதேச பொலிஸ் ஊடாக அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ’21 ...

மேலும்..

நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நாடாளுமன்றமொன்று இல்லாமல் செயற்பட முடியாது – ரணில்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்ற உண்மைத் தன்மையை, அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 பேர் பூரண குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயில் கும்பாபிசேகம் பிற்போடப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிசேக திருவிழா எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறாது என திருக்கேதீஸ்வர திருத்தல திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா ...

மேலும்..

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை மற்றும் மகள்: தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இருவரும் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், நேற்று ...

மேலும்..

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முற்பட்டோருக்கு நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டியுள்ளது – அங்கஜன்

மக்களின் ஜனநாயக பண்பியலுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பிற்போட முயற்சித்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகுந்த பாடத்தை புகட்டி இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் ...

மேலும்..

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுப்பு

முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் பாவனையிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த 21 வயதான யுவதியின் சடலம் பொருமிப்போன நிலையில் இன்று (புதன்கிழமை) பகல் கண்டெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 31ஆம் திகதி ...

மேலும்..

உலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்

ஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டி அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் ...

மேலும்..

கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நிதியை பெற்றுக்கொள்ள வெனிசுவேலா அரசாங்கம், எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய சட்டமன்றத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியக் குழுவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோர்ஜ் ...

மேலும்..

‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை

‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ...

மேலும்..

டெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்

டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின. தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ...

மேலும்..