இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள ...

மேலும்..

துணைவேந்தர் மதிப்பீட்டுக் குழுவுக்கான பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் தெரிவு!

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள், பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் ...

மேலும்..

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – மைத்திரி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க ...

மேலும்..

நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிதுள்ளது. இன்று (சனிக்கிழமை) 5:30மணி வரையான நிலவரப்படி 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..

நெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்

கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார் நெடுந்தீவு- குறிகட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை ...

மேலும்..

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு

வவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை  பொலிஸார் இன்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம்  ஊடாக பண்படுத்தியுள்ளார். இதன்போது பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை ...

மேலும்..

சூரியனின் விழுதுகள் நிகழ்வில் சம்பந்தனின் செவ்வி (வீடியோ)

https://www.facebook.com/varatharajah.nitharsan/videos/2645884345526778/

மேலும்..

உண்மை, நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்வு கிடைப்பதை கோட்டா தடுக்கமுடியாது! இடித்துரைக்கின்றார் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவால் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாகவும் சுகாதார முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித்

நாடாளுமன்றை மீளக்கூட்டி, நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மக்களை திசைத்திருப்பும் கருத்துக்களைத்தான் அரசாங்கம் ...

மேலும்..

மன்னாரில் பனை சார் உற்பத்தி தொழிலை மேற்கொள்வோர் தொடர்ந்தும் பாதிப்பு

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மன்னார் தீவுப்பகுதிக்குள் பனை உற்பத்தி சார்ந்த தொழிலை மேற்கொள்ளும் சுமார் 8 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கூலித்தொழிலையும் விறகு வெட்டுதல், ...

மேலும்..

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது- சிவமோகன்

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக  ஒருபோதும் ஏற்க முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளமைக்கு பதிலளிக்கும் வகையில்  ...

மேலும்..

மலையகத்துக்கு விடுதலை வேண்டும்: மட்டக்களப்பில் தனிநபர் போராட்டம்

மலையக மக்கள் இதுவரைப்பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க  வேண்டுமென கோரி தனிநபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில்  இன்று (சனிக்கிழமை) காலை முதல் ஈடுபட்டுள்ளார். நுவரெலியா- பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 ...

மேலும்..

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 89 வயதில் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் மீண்டனர்

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து 781 பேர் வெளியேறியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ...

மேலும்..