இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழுவுக்கு அக்கறையில்லை – மஹிந்த அணி பகிரங்க குற்றச்சாட்டு

"நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அக்கறை கிடையாது. தேர்தலைப் பிற்போடும் எதிர்த்தரப்பினரது நோக்கத்துக்கு ஆதரவாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றது . - இவ்வாறு "நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அக்கறை கிடையாது. தேர்தலைப் பிற்போடும் எதிர்த்தரப்பினரது நோக்கத்துக்கு ஆதரவாகவே ...

மேலும்..

சஜித் அணியினர் இடைநிறுத்தம்! ரணில் கடிதம் மூலம் அறிவிப்பு!!

"மாற்று அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். கட்சியுடன் மீண்டும் இணைய விரும்பி செயற்படுபவர்களை இணைத்துக்கொள்வதில் ...

மேலும்..

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து  வெளியேறியுள்ளனர். இதன்படி கொரோனாத் தொற்றால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 357ஆக உயர்வடைந்துள்ளது எனக் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குணமடைந்த 13 பேரில் ...

மேலும்..

ஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம் அதிக ஆசனங்களே தமிழ்க் கூட்டமைப்பின் இலக்கு; பங்காளிகளுடனான சந்திப்பில் சம்பந்தன் தெரிவிப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளேயும் வெளியேயும் சதித்திட்டங்கள் தீட்டப்படக்கூடும். கண்டபடி விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். இவற்றையெல்லாம் தாண்டி ஒற்றுமையாக ஓரணியில் நின்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் ...

மேலும்..

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் 20 பேர் சாவு கொரோனாவால் 10 பேர் சாவு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 டெங்கு நோயாளர்களும், கடந்த வருடத்தில் 150 டெங்கு நோயாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். அதேவேளை, இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோயினால் இதுவரை 10 பேரே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா ...

மேலும்..

தமிழ்த் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்! – தனிநாடு சாத்தியமில்லை என்கிறார் மஹிந்த

"வடக்கு, கிழக்குப் பகுதிகளை தனி நாடாக்க வேண்டும் என்ற சிந்தனையின் மூலம் இந்த நாட்டில் தமிழ் அரசியல் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. இது நடைமுறை சாத்தியக் கோரிக்கையல்ல. இலங்கையைப் பிரித்து தனிநாடு என்பது சாத்தியமானது அல்ல. தமிழ் அரசியல்வாதிகள் களயதார்த்தைப் ...

மேலும்..

யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 300 பேர் வரையில் ...

மேலும்..

சட்டவிரோத மண் அகழ்வு: இருதரப்பினருக்கு இடையில் மோதல்- பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயம்

மட்டக்களப்பு- வாகனேரி பகுதியில் சட்ட விரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ...

மேலும்..

எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்!

நக்கீரன் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன்  சிங்கள ஊடகம்  ஒன்றுக்குச்  சிங்களத்தில் கொடுத்த நேர்காணல் பற்றிய வாதம், எதிர்வாதம் நின்ற பாடில்லை. Colombo Telegraph என்ற இணையதளத்தில்  ததேகூ பேச்சாளர் சுமந்திரன் ததேகூ இல் இருந்து உடனடியாக விலக வேண்டும் ...

மேலும்..

வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு!

வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் ...

மேலும்..

வடமராட்சி குண்டு வெடிப்பு – துன்னாலையை சேர்ந்தவர் ரி.ஐ.டியால் கைது!

வடமராட்சி கிழக்கு வல்லிபுரப் பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(வியாழக்கிழமை) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இதன்போது கைது ...

மேலும்..

“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது – ஜனாதிபதி!

“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கனடா, ஜமைக்கா மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் -19 மற்றும் அதற்கு பின்னரான காலங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவி குறித்த உயர்மட்ட ...

மேலும்..

பெலாரஸுல் இருந்து 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பெலாரஸ் நாட்டில் இருந்து 277 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். குறித்த பயணிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பெலாரஸ் மின்ஸ்க் நகர் விமான நிலையத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் ...

மேலும்..