இலங்கை செய்திகள்

வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை ...

மேலும்..

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண் ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களுக்கு தமது விஜயம் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் அவர்கள் கருத்து ...

மேலும்..

தோட்ட மக்களிடையே பயங்கரவாதத்தை அனுமதிக்காத பெருமை தொண்டமானையே சாரும் – பிரதமர்

தோட்ட மக்களிடையே பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அனுமதிக்காத பெருமை மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானையே சாரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்

யாழ். தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் ...

மேலும்..

முகக் கவசம் அணிவது குறித்து சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு

இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்த சுகாதார அமைச்சு 46 வகையான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. குறித்த ஆலோசனைகளிலேயே இந்த விடயம் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு ஏற்படுவது தொடர்பாக இவ்வாறு 2 ...

மேலும்..

யாழில் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி

யாழில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்த 123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டஅரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு இன்று (வியாழக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் மக்களின் ஏற்பாட்டில் சிவகாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், அன்னாரது ஒளிப்படத்திற்கு நினைவு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 13 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரை 745 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை 1469 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 714 பேர் ...

மேலும்..

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

நாட்டில் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களை ஆன்மீக இறை வழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிலுள்ள  வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் ...

மேலும்..

போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆயிரத்து 900 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ...

மேலும்..

தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த விசாரணைகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு

இலங்கை முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதி  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..